சனி, 7 நவம்பர், 2009

துபை முமுகவின் 4 வது இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் பெரும் உதவியால் 06-11-09 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் துபை முமுக சார்பாக 4 வது இரத்த தானம் முகாம் துபை அல் வாசல் மருத்துவமனையில் நடைபெற்றது.




துபை மண்டல நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்ந்துருத்தி அப்துல் ரவூஃப் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இம்முகாமில் 50 சகோதரர்கள் இரத்த தானம் செய்தார்கள். முகாமினுடைய சிறப்பு அழைப்பாளர்களாக ST கூரியர் நிறுவனத்தின் துபை மேலாளர் சகோதரர்க சிராஜ் அவர்களும், இஸ்லாமிய அழைப்பாளர் கீழை ஜமீல் அவர்களும் அமீரகத்தினுடைய தொழில் அதிபரும் இளையாங்குடியைச் சார்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்கள். அமீரகத்தின் முமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி முகாமை பார்வையிட்டு சென்றார்கள். சிறப்பான முறையிலே துபை மண்டல முன்னால் துணைச் செயலாளர் ஹைதர் நஸீர் அல் கூஸ் பொருப்பாளர் மேலப்பாளையம் அப்துல் கரீம் ஆகியோர் சிறப்பான வாகன வசதிகளை செய்திருந்தார்கள்.
--நமது செய்தியாளர்--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக